####அறிவோம்####
சௌரி சௌரா
சௌரி சௌரா (Chauri Chaura) என்பது இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் அருகில் உள்ள ஒரு நகரம். 1922 பிப்ரவரியில் மகாத்மா காந்தி முன்னின்று நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் வன்முறை பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, இயக்கம் வன்முறைப் பாதையில் செல்வதை விரும்பாமல் அதனை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். வன்முறை ஓயும் வரை மூன்று வாரங்கள் உண்ணாநிலைப் போராட்டமொன்றை நடத்தினார். சௌரி சௌரா போராட்டத்தில் பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட வன்முறையில் சிலர் காவல் நிலையத்தை எரித்து 22 காவல்துறையினர் கொல்லப்பட்ட நிகழ்வினால் இந்நகரம் மிகவும் அறியப்படுகிறது. . அதன் காரணமாக 228 பேர் கைது செய்யப்பட்டனர். 6பேர் போலீஸ் காவலில் இறந்தனர். 172 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. காந்திஜி வழக்கம் போல் இது பற்றி ஆங்கிலேயருக்கு எதிராக எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மூன்று பேர் கொல்லப்பட்டால் அது வன்முறை. ஆனால் 172 பேருக்குத் தூக்குத்தண்டணை விதிக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மானவேந்திரனாத் ராய் (நரேன் பட்டாச்சார்யா) என்ற கம்யூனிஸ்ட் தலைவர் ஒரு பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தார். பின்னர் அலகாபாத் உயர் நீதி மன்றம் 19 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 110 பேருக்கு ஆயுள் தண்டனையும் மற்றவர்களுக்குக் கடுங்காவல் தண்டனையும் விதித்தது.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment