####அறிவோம்####
 
புகழ்பெற்ற நூல் - நூலாசிரியர்
 
புகழ்பெற்ற நூல் - நூலாசிரியர்
1. குண்டலகேசியின் ஆசிரியர் யார்?
                     நாதகுத்தனார்.
2. பழமொழியின் ஆசிரியர் யார்?
              மூன்றுரையரையனார். 
3. மாசறு பொன்னே வலம்புரி முத்தே
    காசறு விரையே கரும்பே.. தேனே - இவ்வரிகள் பயின்று வரும் நூல்?
                        சிலப்பதிகாரம்.
4. இராவண காவியம் நூலாசிரியர் யார்?
                        புலவர் குழந்தை.
5.  சீறாப்புராணம் நூலாசிரியர் யார்?
                           உமறுப்புலவர்.
6. கலிங்கத்துப் பரணி நூலாசிரியர் யார்?
                      ஜெயங்கொண்டார்.
7. இயேசு காவியம் நூலாசிரியர் யார்?
                           கண்ணதாசன்.
8. நெடுந்தொகை என்ற சொல் குறிக்கும் நூல்?
                              அகநானுறு.
9. காமாட்சி நூலாசிரியர் யார்?
                          புலவர் குழந்தை.
10. பொன்னியின் செல்வன் என்ற நூலின் ஆசிரியர் யார்?
                     கல்கி கிருஷ்ணமூர்த்தி.
11. நான்மணிக்கடிகை நூலாசிரியர் யார்?
                           விளம்பிநாகனார்.
12. பாரதிதாசன் எழுதாத கவிதை நூல் எது?
                                    ஞானரதம்.
13. ஆலாபனை நூலாசிரியர் யார்?
                          அப்துல் ரஹ்மான்.
14. ஆத்திச்சூடி பாடிய புலவர் யார்?
                                ஒளவையார்.
15. அறிவை வளர்க்கும் அற்புதக் கலைகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
                          ஜானகி மணாளன்.
16. திருக்குற்றாலக் குறவஞ்சி நூலின் ஆசிரியர் யார்?
                  திரிகூட ராசப்பக் கவிராயர்.
17. திருவருட்பா நூலின் ஆசிரியர் யார்?
                          இராமலிங்க அடிகள்.
18. பிரபுலிங்க லீலை என்ற காப்பியத்தை எழுதியவர்?
                                சிவப்பிரகாசர்.
19. கண்ணதாசன் எழுதிய நூல்?
      மாங்கனி, ஆட்டனத்தி ஆதி மந்தி, இயேசு காவியம்.
20. யாரைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து கலிங்கத்துப்பரணி பாடப்பெற்றது?
                    முதலாம் குலோத்துங்கன்.
21. மீனாட்சியம்மை குறம் எழுதியவர் யார்?
                                குமரகுருபரர்.
22. வடலூரில் இராமலிங்க அடிகளால்  நிறுவப்பட்டது யாது?
  சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், சத்திய தருமசாலை, சத்திய ஞானசபை.
23. தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர் யார்?
                        வேதநாயகம் பிள்ளை.
24. சித்திரகவி எழுதுவதில் வல்லவர் யார்?
                       இராமச்சந்திர கவிராயர்.
25. பாரதியாரின் இயற்பெயர்?
                              சுப்பிரமணியன்.
 
 
 
 
 
Popular posts from this blog
 இலக்கண குறிப்பு       தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும்.     • எழுத்து இலக்கணம்   • சொல் இலக்கணம்   • பொருள் இலக்கணம்   • யாப்பு இலக்கணம்   • அணி இலக்கணம்        இலக்கண குறிப்பு  :     1. நீரோசை                ஆறாம் வேற்றுமைத் தொகை  2. பழகு, பாட்டு - வினைத்தொகை  அரைத்திடும் சேனை       -  எதிர்காலப் பெயரெச்சம்  வன்கானகம்  -  பண்புத்தொகை  போந்து  -  வினையெச்சம்  வன்தூறு  -  பண்புத்தொகை  பறித்தமயிர்  -  பெயரெச்சம்  நுண்டுளி  -  பண்புத்தொகை  மென்குறள்  -  பண்புத்தொகை  ஆடுக  -  வியங்கோள் வினைமுற்று  தானதர்மம்  -  உம்மைத்தொகை  அமைந்த, கொடுத்த  -  பெயரெச்சம்  புதுக்குநாள்  -  வினைத்தொகை  தண்கடல்  -  பண்புத்தொகை  செங்கதிர்  -  பண்புத்தொகை  காகிதப்பூ  -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை  புருவக்கொடி  -  உருவகம்  இணையிலாப் பசுமை  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  வான்மழை  -  ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை  உதைத்த  -  பெயரெச்சம்  கட்டும்  -  செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்  நிழல் ...
 
 
 
 
 
 வலஞ்சுழி எழுத்துகள்       அ, எ, ஔ, ண, ஞ      இடஞ்சுழி எழுத்துகள்     ட, ய, ழ   
 
 
 
 
 
 வார்தா கல்வித் திட்டம்                                             வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.    சிறப்பு அம்சங்கள்                                         அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
 
 
 
 
 
 
  
Comments
Post a Comment