####அறிவோம்####
மொழிவாரி மாநிலம் உருவாக்க கமிட்டி
மொழிவாரி மாநிலம் உருவாக்க கமிட்டி
- மொழிவாரி மாநிலம் அமைக்க ஏற்படுத்தப்பட்ட முதல் கமிட்டி ஏஸ்.கே. தார் கமிட்டி. இது 1948 நவம்பரில் அமைக்கப்பட்டது. இது மொழிவாரியாக மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து 1948ஆம் ஆண்டு இறுதியில் ஜெ.வி.பி கமிட்டி அமைக்கப்பட்டது. ஜெ.வி.பி என்பது ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீத்தராமலு ஆகியோரின் முதல் எழுத்துக்கள் சுருக்கமாகும். இக்கமிட்டியும் மொழிவாரி மாநிலங்கள் அமைக்க ஆதரவு தெரிவிக்கவில்லை.
- இந்நிலையில் தனி ஆந்திர மாநிலம் உருவாக்க கோரி போராடிய பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் மரணமடைந்ததால் ஏற்பட்ட பதற்றத்தை தனிக்க ஆகஸ்ட் 1, 1953இல் ஆந்திர மாநிலம் உருவாகியது. மொழிவாரிய பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் ஆந்திர மாநிலம்.
- ஆந்திராவை தொடர்ந்து பிற மாநிலங்களை மொழிவாரியாக பிரிக்க மாநில மறுசீரமைப்பு கமிட்டி 1953இல் டிசம்பர் 22இல் பாசில் அலி தலைமையில் தொடங்கப்பட்டது. இதன் இரு உறுப்பினர்கள் எச்.என்.குன்ஸ்ரு மற்றும் கே.என்.பணிக்கர். இது 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க இந்தியாவை பரிந்துரை செய்தது. இதையடுத்து மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956இல் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து இந்தியா 14 மாநிலங்களாகவும், 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
வார்தா கல்வித் திட்டம் வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. சிறப்பு அம்சங்கள் அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
Comments
Post a Comment