####அறிவோம்####
 
தமிழ்நாட்டில் மின்சார இணைப்புகளை வலுப்படுத்துவதற்கான 451 மில்லியன் டாலர்
 
தமிழ்நாட்டில் மின்சார இணைப்புகளை வலுப்படுத்துவதற்கான 451 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய மேம்பாட்டு வங்கியும் இந்தியாவும் கையெழுத்திட்டன
தமிழ்நாட்டில் மின்சார இணைப்புகளை வலுப்படுத்துவதற்கான 451 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய மேம்பாட்டு வங்கியும் இந்தியாவும் கையெழுத்திட்டன. சென்னை-கன்னியாகுமரி தொழிலியல் இணைப்புத் திட்டத்தின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் மின்சார  இணைப்பை இது வலுப்படுத்தும். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் கிழக்கு கடற்கரை பொருளாதார மண்டலம், ஈசிஈசி-யின் ஒரு பகுதியாக சென்னை-கன்னியாகுமரி தொழிலியல் இணைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈசிஈசி-ஐ மேம்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஆசிய மேம்பாட்டு வங்கி முன்னணி கூட்டாளியாகும்.
இந்த கடன் ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் திரு.சமீர் குமார் கரே, ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியா அலுவலகத்தில் இயக்குனராக உள்ள திரு.கெனிச்சி யோகோயாமா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தம் கையெழுத்திட்ட பின் பேசிய திரு.கரே, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ள கூடுதல் மின்சாரத் தேவையை சமாளிக்க இந்தத் திட்டம் உதவும் என்றும், சென்னை-கன்னியாகுமரி தொழிலியல் இணைப்புத் திட்டத்தில் உள்ள புதுப்பிக்கக் கூடிய மின்சாரம் உள்ளிட்ட புதிய மின் உற்பத்தி அமைப்புகளிடமிருந்து மின்சாரத்தை மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள தொழிலியல் மையங்களுக்கு கொண்டு செல்ல திட்டம் உதவும் என்றும் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு.யோகோயாமா, சென்னை-கன்னியாகுமரி தொழிலியல் இணைப்புத் திட்டத்திற்கு சிறப்புத் திட்டமிடல், அடிப்படைக் கட்டுமானத்திற்கான முதலீடு ஆகியவற்றின் மூலம் ஆசிய வளர்ச்சி வங்கி உதவி வருவதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டின் விரைவாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் தொழிலியல் போட்டியிடும் தன்மையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் திட்டம் உதவும் என்றும் அவர் கூறினார்.
 
 
 
 
 
 
 
Popular posts from this blog
 இலக்கண குறிப்பு       தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும்.     • எழுத்து இலக்கணம்   • சொல் இலக்கணம்   • பொருள் இலக்கணம்   • யாப்பு இலக்கணம்   • அணி இலக்கணம்        இலக்கண குறிப்பு  :     1. நீரோசை                ஆறாம் வேற்றுமைத் தொகை  2. பழகு, பாட்டு - வினைத்தொகை  அரைத்திடும் சேனை       -  எதிர்காலப் பெயரெச்சம்  வன்கானகம்  -  பண்புத்தொகை  போந்து  -  வினையெச்சம்  வன்தூறு  -  பண்புத்தொகை  பறித்தமயிர்  -  பெயரெச்சம்  நுண்டுளி  -  பண்புத்தொகை  மென்குறள்  -  பண்புத்தொகை  ஆடுக  -  வியங்கோள் வினைமுற்று  தானதர்மம்  -  உம்மைத்தொகை  அமைந்த, கொடுத்த  -  பெயரெச்சம்  புதுக்குநாள்  -  வினைத்தொகை  தண்கடல்  -  பண்புத்தொகை  செங்கதிர்  -  பண்புத்தொகை  காகிதப்பூ  -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை  புருவக்கொடி  -  உருவகம்  இணையிலாப் பசுமை  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  வான்மழை  -  ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை  உதைத்த  -  பெயரெச்சம்  கட்டும்  -  செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்  நிழல் ...
 
 
 
 
 
 வலஞ்சுழி எழுத்துகள்       அ, எ, ஔ, ண, ஞ      இடஞ்சுழி எழுத்துகள்     ட, ய, ழ   
 
 
 
 
 
 வார்தா கல்வித் திட்டம்                                             வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.    சிறப்பு அம்சங்கள்                                         அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
 
 
 
 
 
 
  
Comments
Post a Comment