####அறிவோம்####
 
தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக சோமா ராய் பர்மன் பொறுப்பேற்பு
 
தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக சோமா ராய் பர்மன் பொறுப்பேற்பு
மத்திய அரசின் தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக 1986 ஆம் ஆண்டு இந்திய குடிமைக் கணக்கு பணி தொகுப்பைச் சேர்ந்த திருமதி சோமா ராய் பர்மன், இன்று (01.12.2019) பொறுப்பேற்றுக் கொண்டார்.
24-வது தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியான திருமதி பர்மன், முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பொறுப்பை வகிக்கும் 7-வது பெண் அதிகாரியாவார். 
2019 டிசம்பர் ஒன்று முதல் மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக திருமதி பர்மனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
தில்லிப் பல்கலைக்கழகத்தின் கணிதப் புள்ளியியலில் எம்ஃபில் பட்டம் பெற்றவரான திருமதி பர்மன், தமது 33 ஆண்டுகால பதவி காலத்தில், உள்துறை, தகவல் ஒலிபரப்பு, தொழில், நிதி, மனிதவள மேம்பாடு மற்றும் கப்பல், சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை போன்ற துறைகளில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளார்.  மத்திய ஓய்வூதிய கணக்கு அலுவலகத்தின் தலைமைக் கட்டுப்பாட்டு அதிகாரி (ஓய்வூதியம்) மற்றும் புதுதில்லியில் உள்ள அரசு கணக்கு மற்றும் நிதி நிறுவன இயக்குனராகவும் இவர் பொறுப்பு வகித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
Popular posts from this blog
 இலக்கண குறிப்பு       தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும்.     • எழுத்து இலக்கணம்   • சொல் இலக்கணம்   • பொருள் இலக்கணம்   • யாப்பு இலக்கணம்   • அணி இலக்கணம்        இலக்கண குறிப்பு  :     1. நீரோசை                ஆறாம் வேற்றுமைத் தொகை  2. பழகு, பாட்டு - வினைத்தொகை  அரைத்திடும் சேனை       -  எதிர்காலப் பெயரெச்சம்  வன்கானகம்  -  பண்புத்தொகை  போந்து  -  வினையெச்சம்  வன்தூறு  -  பண்புத்தொகை  பறித்தமயிர்  -  பெயரெச்சம்  நுண்டுளி  -  பண்புத்தொகை  மென்குறள்  -  பண்புத்தொகை  ஆடுக  -  வியங்கோள் வினைமுற்று  தானதர்மம்  -  உம்மைத்தொகை  அமைந்த, கொடுத்த  -  பெயரெச்சம்  புதுக்குநாள்  -  வினைத்தொகை  தண்கடல்  -  பண்புத்தொகை  செங்கதிர்  -  பண்புத்தொகை  காகிதப்பூ  -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை  புருவக்கொடி  -  உருவகம்  இணையிலாப் பசுமை  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  வான்மழை  -  ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை  உதைத்த  -  பெயரெச்சம்  கட்டும்  -  செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்  நிழல் ...
 
 
 
 
 
 வலஞ்சுழி எழுத்துகள்       அ, எ, ஔ, ண, ஞ      இடஞ்சுழி எழுத்துகள்     ட, ய, ழ   
 
 
 
 
 
 வார்தா கல்வித் திட்டம்                                             வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.    சிறப்பு அம்சங்கள்                                         அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
 
 
 
 
 
 
  
Comments
Post a Comment