####அறிவோம்####
இந்திய அரசியலமைப்பு
1. அமைச்சரவை செயலகத்தின் முக்கிய பிரிவுகள் யாவை?
குடிமைப்பிரிவு, இராணுவப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு.
2. மாநில கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு?
1964.
3. ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நீதிப்பேராணை எது?
ஆட்கொணர்வு நீதிப்பேராணை.
4. துணை நீதிமன்றங்களின் பணி என்ன?
உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை பரிசீலித்து.
5. இந்திய குடியுரிமை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1955.
6. குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைப்பவர் யார்?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.
7. இந்திய அரசியலமைப்பில் எந்த பாகத்தில் இந்திய குடியரசுத்தலைவரின் நெருக்கடிக்கால அதிகாரங்கள் குறிப்பிடப்பற்றுள்ளன?
XVIII.
8. நிலைக்குழுக்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிதாக உருவாக்கப்படும்?
ஒவ்வொரு ஆண்டும்.
9. நாடாளுமன்ற தலைமைச்செயலகத்தின் நிர்வாகத்தலைவர் யார்?
சபாநாயகர்.
10. கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மாநிலங்களவை எத்தனை தனித்துவமான அதிகாரங்களை பெற்றுள்ளது?
இரண்டு.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
வார்தா கல்வித் திட்டம் வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. சிறப்பு அம்சங்கள் அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
Comments
Post a Comment